Nov 6, 2012

பிரார்த்தனை

பிரார்த்தனை 

வேண்டுதலுடன்
 பிரார்த்திக்கும்
வேலையெல்லாம்
 அசிரீரீயாக ஒலிக்கிறது
தமிழன்பனின் தங்க வரிகள்,
 "விதைக்க மறந்தவனே! - உனக்கேன்
அறுவடை ஞாபகம்!! "

மன்னிப்பு

மன்னிப்பு
என் முதல்
கடமை !

உன் முதல்
குணம் !!

ரச்சகரின் வழியில்
வாழ்பவள் நீ !!!


 மரணத்தைவிட
கொடுமையானது !
மன்னிக்கப்பட்டவனின்
குற்றவுணர்வு !!

என்
பாவங்களை
அறிக்கை செய்கிறேன் !

மன்னிக்கப்பட அல்ல,
என்
குற்றவுணர்வு
குறைய !!

பாவத்தின்
சம்பளம்
மரணம் !

மறந்தும் மன்னித்துவிடதே - என்னை
மரணமேனும் மன்னிக்கட்டும்!!