Oct 6, 2011

நாற்றுகள்

முதல் நாள் 
பள்ளி செல்லும்
குழந்தை,

பேரம் படிந்து 
இழுத்து செல்லப்படும் 
பசுங்கன்று ,

புயல் மழையில் 
கூடு இழந்த
பறவை,

நுனி கருகிய
வேனில் கால
வேம்பு,
  
அனைத்திலும்
வேறுபட்டு சிரிக்கின்றன
செங்கழனி நாற்றுகள்!

பறிக்கப்படும் 
வலி மறந்து 
புதுவயல் காணும் 
ஆவலில்!!

நாம் நாற்றுகள்!
பறிக்கபட்டாலும் ,
பதியப்படுவோம்!!