முதல் நாள்
பள்ளி செல்லும்
குழந்தை,
பேரம் படிந்து
இழுத்து செல்லப்படும்
பசுங்கன்று ,
புயல் மழையில்
கூடு இழந்த
பறவை,
நுனி கருகிய
வேனில் கால
வேம்பு,
அனைத்திலும்
வேறுபட்டு சிரிக்கின்றன
செங்கழனி நாற்றுகள்!
பறிக்கப்படும்
வலி மறந்து
புதுவயல் காணும்
ஆவலில்!!
நாம் நாற்றுகள்!
பறிக்கபட்டாலும் ,
பதியப்படுவோம்!!