பாலைவனச் சோலை
காணும் தூரமெங்கும்
வெம்மை காடுகள்.
ஒளிந்துகொள்ள
பொந்து தேடும்
அரவம்.
நிழல் தேடி
தன் நிழலில் நிற்கும்
ஓணான்.
உறவுகள் எவருமில்லா
சோகத்தில் ஓலமிடும்
பறவை.
நீரற்று போனாலும்
பசுமை மாறா
கள்ளி.
கொம்பு பற்றிய
என் கரங்களில்
குருதி.
வசந்தம் வாரா
பாலைவனத்தில்
காத்திருக்கிறேன்!
என்றாவது பூக்கும்
அந்த மஞ்சள் மலர்!!