Mar 19, 2010

பாலைவனச் சோலை


பாலைவனச் சோலை



காணும் தூரமெங்கும்
வெம்மை காடுகள்.


ஒளிந்துகொள்ள
பொந்து தேடும்
அரவம்.

நிழல் தேடி
தன் நிழலில் நிற்கும்
ஓணான்.
உறவுகள் எவருமில்லா
சோகத்தில் ஓலமிடும்
பறவை.

நீரற்று போனாலும்
பசுமை மாறா
கள்ளி.


கொம்பு பற்றிய
என் கரங்களில்
குருதி.

வசந்தம் வாரா
பாலைவனத்தில்
காத்திருக்கிறேன்!


என்றாவது பூக்கும்
அந்த மஞ்சள் மலர்!!

Mar 12, 2010

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
சீட்டி பாவடையில்
மிட்டாய் கடிக்கும்
எதிர்வீட்டு சிறுமி

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
இடிமன்னர்களை
லாவகமாய் தவிர்க்கும்
அந்த பேருந்து பெண்

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
மல்லிகை நடுவே
ஒற்றை ரோஜா சூடும்
என் அலுவலக தோழி

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
உதடு கடித்து
பின் மெல்ல நகும்
என் மனைவி

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
தனக்கான காதல் கடிதத்தை
என்னிடம் படித்துக்காட்டும்
என் மகள்

உனக்கும் எவரேனும்
ஞாபகப்படுத்துகிறார்களா
என்னையும் எனது காதலையும்

உதிரி பூக்கள்

பசுமை விரும்பி

பட்டதை மட்டும் வெட்டும்
பசுமை விரும்பி!
சுள்ளி பொறுக்கும்
சிறுமி!!

முத்துகள்

ரோஜா
இதழ் விரித்தால்
மகரந்தம் தானே!
உனக்குள் மட்டும்
எப்படி முத்துகள்?

வீணையடி நீஎனக்கு

மீட்டும் வேளை
விரல் அறுந்தும்
வலியில்லை!
வீணையாய் நீ!!