Nov 26, 2010

ஞான கிறுக்கன்

குறிஞ்சியாய் பூத்த
நான்
உன் வருகைக்குபின்
நித்திய மல்லியானேன்!

என் கரம்பற்றி
நீ சொல்லிகொடுத்த
பாடத்தையே
எல்லா தேர்வுகளிலும்
எழுதிகிறேன்!!

எனக்கு பட்டமளிக்க
மறுக்கிறார்கள்!
அவர்களுக்கு
எப்படி தெரியும்
நான் படித்தது
உன்னை மட்டுமென்று!!

விசத்தின் கசப்பிற்கு
தேனானது!
என்னை மறுதலித்த
பின்னும் நீ சிந்தும்
சிநேக புன்னகை!!

நம் கல்லூரி
உனக்கோர் வேடந்தாங்கள்!
எனக்கோ கருவறை!!

நிதமும் வழிபடுகிறேன்!
இறுதிநாளில் நாமமர்ந்த
மரத்தடி இருக்கையை!!

என்னையொரு
கிறுக்கனாய் பார்க்கிறார்கள்!
அலைபேசியில்
காதல் வளர்க்கும்
நம் இளவல்கள்!!

அவர்களுக்கு எப்படி தெரியும்!
எனக்கு ஞானம் பிறந்தது
அந்த மரத்தடியிலென்றும்!
நீயே என்
ஞானகுருவென்றும்!!

Nov 12, 2010

அன்றில்



சாதக பறவையானேன்!
எனை தாலாட்டும்
சங்கீதம் நீயானபோது!!

சக்கரவாகமானேன்!
என் தாகம் தீர்க்கும்
மழை நீயானபோது!

பீனிக்ஸ் பறவையானேன்!
எனக்காக நீயழுது
என் தலை கோதியபோது!!

அன்றில் பறவையாகிறேன்!
நம் காதலை நீ கொன்று
என்னை வாழ்த்தசொன்னபோது!!