மொட்டு மலராகி
மலர் சருகாகி - பின்
வெட்டி எறியப்படும்
ரோஜா குச்சியாகிறேன் !
நீ இல்லாத நான் !!
முள்முடி சுமக்கிறேன் !
ரோஜாக்களை நீ
பறித்துக்கொண்டதால் !!
என்னை கடக்கும்
எல்லோரிலும்
உன்னை தேடுகிறேன் !!
பிச்சி சூடிய
நீ பிரிந்தபின்
பிச்சியானேன் !
நீ இல்லாத நான்!!